1975இல் இருந்து, தமிழ் நாட்டுக்க்காகவும் , தமிழ் மக்களின் நலனுக்காகவும் வாழும் ஒரே மனிதர்னா அவர் ரஜினிதான் .. காவேரி பிரச்சனையாகட்டும் காஷ்மீர் பிரச்சனையாகட்டும் கருத்து சொல்ல மட்டும் முதல் வரிசையில நிப்பாரு ... 2002 ல தமிழ் நாட்டுக்கு காவேரி நீர திறந்துவிட முடியாதுன்னு கர்நாடகா சொன்னப்ப , நதிநீர் இணைப்புக்கு என் சொந்த பணம் ஒரு கோடி தரேன்னு அரசியல்வாதிங்க மாதிரி அறிக்கை மட்டும் விட்டாரு, இப்போ 2012 இன்னும் அந்த ஒரு கோடிய கொடுத்த மாதிரி தெரியல . பாவம் ரஜினிகிட்ட காசு இல்ல போலும் ......
எந்த கட்சி ஆட்சிக்கு வருமோ, அந்த கட்சிக்கு அதரவுனு வெள்ளைப் புறாக்கள பறக்க விடுவார் .. 'ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனதற்கும் ரஜினிதான் காரணம்'னு அவுங்க ரசிகர்கள் பேனர் வைச்சத பாத்து , என்ன நானே ஒரு முறை கிள்ளி பாத்தேன் ... "அ .தி .மு .க மட்டும் திரும்ப ஆட்சிக்கு வந்தா கடவுளால கூட தமிழ்நாட்ட காப்பாத்த முடியாது"ன்னு 1996 ல சொன்னாரு ,, அவரே 2011ல "தமிழ்நாட்ட காப்பாத்திடீங்க" நு அ .தி .மு .க ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக் கொடி காட்டுனத யாரும் மறக்கல ..ஒகேனக்கல் காவேரி நீர் பிரச்சனை வந்ததும் கன்னட தலைவர்கள திட்டினார்.. "உன் படம் கர்நாடக தியேட்டர்ல ஓடாது" நு அவுங்க கருப்புக் கொடி காட்டுனதும் .. மறுபடியும் வெள்ளைக் கொடிக்கு வேலை கொடுத்தார் ... பொழைக்கத் தெரிஞ்ச புள்ள ... நீங்க நல்ல வருவீங்க சார் ...
"என்னை வாழ வைத்த தமிழ் மக்களே " அடிக்கடி சொல்ற டயலாக் ... ரஜினி இந்த டயலாக் சொல்லும் போது "என்னை வாழ வைத்த , வாழ வைத்துக் கொண்டிருக்கும் தமிழ் பலியாடுகளே "நு அதன் உள் அர்தத்த புரிஞ்சிக்கணும் ... அவர் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு வீதம் 26 கோடி , 45 கோடின்னு சம்பளம் வாங்கிட்டு ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் ராகவேந்தர் கோயிலுக்கு வளர்ச்சிப் பணிகளுக்காக 10 கோடி கொடுப்பார் இந்த கர்ண பிரபு .. கண்ணுக்கு தெரியுற மக்களுக்கு அவர் கடனாகூட ஒரு ரூபா தர மாட்டார் ... சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை விபத்தப்போ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக 40 லட்ச ரூபாய்க்கு மருந்து பொருட்கள கொடுத்த மம்முட்டிக்கு இருந்த அக்கறை கூட ரஜினிக்கு இல்ல ... அதே ரஜினி குணமாகி சிங்கப்பூர் ல இருந்து வந்தப்ப பாக்கப் போன ரசிகர்களுக்கு போலீஸ் தடியடியும் , அடிப்பட்டு ரத்தம் கொட்டுனதும்தான் மிச்சம் ..
ரஜினி இன்னும் நிறைய நல்லது செஞ்சிருக்கார் , இன்னும் செய்வார் ......
ரஜினி படம் ரிலிஸ் ஆனா போதும் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ண பல முட்டாள்கள் கூட்டம் முளைக்கும் , அட முட்டாள்களே ..!!! உங்க தலைவன் பேர சொல்லி அந்த பால , பட்டினியால சாகுற குழந்தைங்களுக்காக குடுத்தா உங்கள என்ன போலீஸ் புடிக்குமா ???