Thursday, April 11, 2013

தமிழர்களே டமிலர்களே ..!!!!

*அன்று "உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என முழக்கமிட்டாய் , இன்று A for Apple , B for Ball .....D for டாடி ..... M for மம்மி  ......T for டமில்.... எனும் அளவிற்கு  ஏக போக  வளர்ச்சியடைந்து விட்டாயடா.!!!

*ஆங்கிலம் பேசுபவர்கள் மட்டும்தான்  அறிவாளிகள் என்பதை ஆணித்தனமாக நம்புகிறவன்  நீ .!! புரியாமல் போனாலும் ஆங்கில செய்தித்தாள்களை வாங்கி சுருட்டி கையில் வைத்துக்கொள்வதும் , அடுத்தவர்களுக்காக ஆங்கிலப் படங்கள் பார்ப்பதையும்  வாடிக்கையாக்கி விட்டாய்..!!! 

*அன்று  ஆரியத்தால் அடிமைப்பட்டுக் கிடந்த நீ.... இன்று திராவிட சக்திகளின் பசிக்கு இறையாகிக்கொண்டிருக்கிறாயடா ..!!!

*திராவிடம், தமிழ் தேசியம் என யார் முழக்கமிட்டாலும் அவர்களின் பின்னால் ஆட்டு மந்தை போல சென்றுவிடுவாய்  ,காசு வாங்கிக்கொண்டு  மாறி மாறி வாக்களித்து உன் சனநாயக கடைமையை தவறாமல் செய்து முடிப்பாய்..!!!

* உழைத்து உண்ணாமல் இலவசத்திற்காக உன் அடுத்த சந்ததிகளையும் சேர்த்து அரசியல் கட்சிகளிடம் அடமானம் வைத்துவிட்டாய்..!!!

*முன்பெல்லாம் புத்தாண்டுக்கு எந்த துணி உடுத்துவது என்றுதான் குழம்புவாய்  , இப்போது புத்தாண்டு  தை 1 ஆ , இல்லை சித்திரை 1 ஆ என்பதிலேயே உனக்கு குழப்பம்..!!!

*வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து விட்டு படித்த படிப்புக்கு வேலை இல்லை என புலம்புவாய் , வடமாநிலத்திலிருந்து  வந்தவர்கள் இங்கு  பானி பூரி விற்று முன்னேறும்போது  "வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது" என முழங்குவாய்..!!!

*அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தாய், இன்று சங்கம் வைத்து  ஜா(தீ )தி வளர்த்துக் கொண்டிருக்கிறாய்..!!!

*உலகில் எங்கு அதர்மம் தலை தூக்கினாலும் நீதி வேண்டி facebook லும் , twitter ரிலும்..." facebook போராளியாக" போராடுவாய் ,பக்கத்து வீடு பற்றி எரியும் போது like செய்துவிட்டு IPL பார்த்து ரசிப்பாய்..!!!

*அன்று pepsi ,coco cola என வந்தாரை மட்டும்  வாழ வைத்தாய் , இன்று TASMAC ஐயும் வசூல் சாதனை செய்ய வைத்து "தமிழ்க்  குடிமகன்" என்பதில் பெருமையடைகிறாயடா ..!!!

*ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரண்டே ஆண்டில் ஒரு கோடி ரூபாய் தருகிறோம் என்று விளம்பரம் கொடுத்தால் கூட சிறிதும் சிந்திக்காமல், கடன் வாங்கியாவது 10 ஆயிரம் கட்டிவிட்டு வருவாயடா..!!!

*தமிழ்நாடு, தமிழ் மக்கள் என்று வீர வசனங்கள் பேசி  படத்தில் நடித்தவனுக்கு நிஜ வாழ்க்கையிலும் பாலபிஷேகம் செய்து தலைவனாக்கி அழகு பார்ப்பாயடா  தமிலா ..!!!
                                                                   ---- வாழ்க உன் புகழ்  பல்லாண்டு ..!!!!